சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் வெளியிட்டார். அதோடு கர்ப்பமாக இருந்த போது பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்து வந்த தீபிகா, அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.