பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் அகைன் மற்றும் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் பூல் புலையா-3 ஆகியவை தான். இந்த இரண்டு படங்களும் இன்று நவம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் அரபு நாடுகளின் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிங்கம் அகைன் திரைப்படம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதம் குறித்த சில சர்ச்சை கருத்துக்களையும் கூறியிருப்பதாக கருதி அந்த படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பூல் புலையா-3 திரைப்படம் அரபு நாடுகளில் மிகவும் எதிர்க்கப்படுகின்ற, தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை விவகாரத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த படமும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதைத் தாண்டி தங்கள் படங்களில் இந்த விஷயங்களை சரி செய்து அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் முயற்சிகளை மேற்கண்ட படக்குழுவினர் மேற்கொண்டுள்ளார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.