லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக சமீபத்தில் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர். அயோத்தியில் நிறைய குரங்குகள் உள்ளதால் அங்கு இன்னும் அதிக கவனிப்புடன் பராமரிக்கப்படுகின்றன. அன்றாடம் அளவுக்கதிகமான குரங்குகளுக்கு தினமும் நேரத்திற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி கோவிலில், ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யா ஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளிக்கும் முயற்சியையும் நடைபெற்று வருகிது. இதில் தற்போது, பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாரும் இணைந்துள்ளார். இவர், அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிப்பதற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளார்.