மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் நிராகரிக்கப்பட்டு ஹிந்தி சினிமாவில் பெரிய வெற்றி பெற்றவர் வித்யாபாலன். தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பொது வெளியில் பல கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். குறிப்பாக, நடிகை என்றால் உடல் மெலிந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் மீது தன்னுடைய கடுமையான விமர்சனங்களை வைத்தவர். தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தனது முதல் காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : எல்லோருக்கும் முதல் காதல் மறக்க முடியாத நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். ஆனால், எனக்கு அது கசப்பான நினைவுகளைத்தான் கொடுத்திருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்தேன். அவரால் நான் ஏமாற்றப்பட்டேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரால் என் இதயம் நொறுங்கிவிட்டது.
காதலர் தினத்தன்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்லூரிப் பெண்ணான நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அன்று என்னிடம் வந்து, 'நான் இன்று என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல இருக்கிறேன் என்று என் காதலர் சொன்னார். நினைத்துப் பாருங்கள், அப்போது என் மனது என்ன பாடு பட்டிருக்கும்? அதோடு என் வாழ்க்கையில் அவர் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அந்த உறவில் இருந்தும் வெளியே வந்து விட்டேன். ஆனால், அதன் பிறகு எனக்கு இப்போது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக் கிடைத்திருக்கிறது. என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.