பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான நாள் முதலே பெண்களை மிகவும் மட்டம் தட்டும் விதமாகவும் அவர்களை பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் விதமாகவும் உருவாகி இருப்பதாக எதிர்ப்பு குரல் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இந்த படம் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூலித்தது.
இப்போதும் கூட ஒரு சிலர் நேரம் கிடைக்கும்போது அனிமல் திரைப்படத்தை பற்றி விமர்சிக்க தவறுவதில்லை. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமீர்கானின் முன்னாள் இரண்டாவது மனைவி கிரண் ராவ் சமீப காலமாக வெளிவரும் படங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறியிருந்தார். ஆனால் அனிமல் இயக்குனர் சந்தீப் அது தன்னைத்தான் குறிக்கிறது என எடுத்துக்கொண்டு கிரண் ராவுக்கு நேரடியாகவே பதில் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் முதலில் உங்கள் கணவரது படங்களை பாருங்கள். கடந்த 20 வருடத்திற்கு முன்பு அவர் நடித்த தில் என்கிற படத்தில் இல்லாத காட்சியையா நான் வைத்து விட்டேன்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இவரது இந்த பதில் குறித்து கிரண் ராவிடம் கேட்கப்பட்டபோது, “நான் இதுவரை சந்தீப் ரெட்டி வங்காவின் படங்களை பார்த்ததே இல்லை. அப்படி பார்த்திருந்தால் தானே அவரது படத்தைப் பற்றி குறை சொல்வதற்கு ? அவரைப்பற்றி நான் சொல்லாதபோது எதற்காக இப்படி என்னை பற்றி விமர்சித்துள்ளார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.




