''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
தமிழில் 'தலைவி, சந்திரமுகி 2' படங்களின் மூலம் இன்றைய சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவரைத்தான் கங்கனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் வதந்தியும் கிளம்பியது.
இந்நிலையில் அதற்கு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கங்கனா. “தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என மீடியாவிற்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். நிஷாந்த் பிட்டி ஜி மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வருபவர். நான் வேறொருவரைக் காதலிக்கிறேன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் வெளியிடுவேன். தயவு செய்து எங்களை சங்கடப்படுத்த வேண்டாம். ஒரு இளம் பெண் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்று சொல்வது சரியல்ல. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் ஒரு சலூனில் ஒருவருடன் கங்கனா கை பிடித்து நடந்து வந்த புகைப்படம் வெளியானது. அவர்தான் கங்கனாவின் காதலர் என்று செய்திகள் வெளியாகி, சர்ச்சையாகின. ஆனால், அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் என சொல்லி சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
தற்போது கங்கனாவே அவருடைய காதலைப் பற்றி சொல்லியிருப்பதால் அவரது காதலர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள பாலிவுட் மீடியாக்கள் வலை வீசிக் கொண்டிருப்பார்கள்.