நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் கனடா நாட்டின் குடியுரிமையை கடந்த 2000ம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பிறகு இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அவரை அக்ஷய்குமார் என அழைத்ததை விட கனடியன் குமார் என்றுதான் ரசிகர்கள் அதிகமாகக் கிண்டலடித்தார்கள். இந்நிலையில் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அக்ஷய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“இதயமும், குடியுரிமையும் இந்தியன்… இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டு இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுளளார்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'ஓஎம்ஜி 2' சுமாரான வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.