விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் கனடா நாட்டின் குடியுரிமையை கடந்த 2000ம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பிறகு இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அவரை அக்ஷய்குமார் என அழைத்ததை விட கனடியன் குமார் என்றுதான் ரசிகர்கள் அதிகமாகக் கிண்டலடித்தார்கள். இந்நிலையில் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அக்ஷய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“இதயமும், குடியுரிமையும் இந்தியன்… இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டு இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுளளார்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'ஓஎம்ஜி 2' சுமாரான வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.