மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
உலக புகழ்பெற்ற 'டைம்' பத்திரிகையில் செய்தியாக, கட்டுரையாக இடம்பிடிப்பதே பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்ததவரை திரைப்படத்துறையில் இருந்து நடிகர் ஆமீர்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோர் இடம் பிடித்தனர். தற்போது இவர்கள் வரிசையில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'பதான்' படத்தின் மூலம் அவர் உலகளாவிய புகழை பெற்றிருக்கிறார். இதுதவிர ஹாலிவுட் படங்களில் ஹீரோயினாக, வில்லியாகவும் நடித்திருக்கிறார், ஆஸ்கர் விருது விழாவின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். 2018ம் ஆண்டு டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தீபிகா இடம் பெற்றிருந்தார். இப்படி பல வழிகளில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள தீபிகா டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்று புதிய கவுரவத்தை பெற்றிருக்கிறார்.
டைம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “உலகில் மனிதசக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை சுற்றியும், எனக்கு எதிராவும் நிறைய அரசியல் நிகழ்வுகள் இருந்தது. அதைப் பற்றி பேச வேண்டுமா என்று தெரியவில்லை. பத்மாவத் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு நான் எதிர்பாராதது. அது ஏன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஒரு பாடலும், ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருது வென்றது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவற்றை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.