லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த 2020ம் ஆண்டு, இந்தியா, சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அருகில் உள்ள கிராமங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 45க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர். ஆயுதங்கள் எதுவும் இன்றி வெறும் கைகலப்பு, கல்வீசி தாக்கி நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர்களான சிஷ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து எழுதிய 'இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புத்தகத்தை தழுவி திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், 'ஏக் அஜ்னபி', 'மிஷன் இஸ்தான்புல்', 'ஜன்ஜீர்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.