ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத். படங்களில் நடிப்பதை விட விதவிதமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
படு கவர்ச்சியான ஆடைகள் அணிந்ததாக, பொது இடங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியதாக இவர் மீது ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டார் அதில் “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்”என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். பலர் உங்கள் பலமே அதுதானே... நீங்கள் நல்ல ஆடைகள் அணிந்தால் நன்றாக இருக்க மாட்டீர்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த டுவிட்டை வெளியிட்ட சில மணி நேரத்திலே. “ஏப்ரல் பூல். நான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவள் என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் உர்பி மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.