ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் பிஸியான நடிகராக நடித்துவரும் பிரித்விராஜ், வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் மலையாள திரையுலகோடு தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதைத் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல படங்கள் தேடி வரும்போது நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்..
இந்த நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மீண்டும் தற்போது படே மியான் சோட்டா மியான் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், டைகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த கிரேஸி ஆக்சன் ரோலர்கோஸ்டர் (பிரித்விராஜ்) வரவால் இந்த படே மியான் குடும்பம் இன்னும் பெரிதாகி உள்ளது என அவரை வரவேற்றுள்ளார் நடிகர் அக்சய் குமார்.