சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஹிந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு அவரது ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இரட்டையர் தான் கதை எழுதியுள்ளனர்.. பிரபல பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 16 முதல் துவங்குகிறது.