விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
பாலிவுட் திரையுலகில் ஆண்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமான, துணிச்சலான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிப்பதற்கு தயங்காத இவர், தற்போது ஓடிடி தளங்கள் வந்துவிட்ட நிலையில் வெப்சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் இவர் ஏற்கனவே தயாரித்த ட்ரிபிள் எக்ஸ் என்கிற வெப்சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பற்றியும் அவர்களது மனைவிகள் பற்றியும் தரக்குறைவான காட்சிகளை இடம்பெறச் செய்துள்ளதாக ஏக்தா கபூர் மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ஏக்தா கபூரின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது, “ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. நீங்கள் நாட்டிலுள்ள இளைய தலைமுறையின் மனதைக் கெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள். இன்று ஓடிடி தளத்தில் எல்லாமே கிடைக்கிறது. நீங்கள் எந்தவிதமான சாய்ஸை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.? இளைஞர்களின் மனதை கெடுக்கும் வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்” என்ற தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் ஏக்தா கபூருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞறிடம், “ஒவ்வொரு முறையும் அவருடைய இதுபோன்ற வழக்குகளுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள்.. இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்கானது அல்ல.. குரல் கொடுக்க முடியாத எளியவர்களுக்கானது. நீங்கள் இனி இதுபோன்று ஒரு பெட்டிஷன் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் நிச்சயமாக ஒரு விலை வைக்க நேரிடும். இதை தயவுசெய்து உங்களுடைய கிளையன்ட்டிடம் தெரியப்படுத்துங்கள்” என்றும் கடுமை காட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்ல பீகாரில் உள்ள பெகுசராயில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்றில் இதே காரணத்திற்காக ஏக்தா கபூர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.