மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஈரானில் உள்ள தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தனது சகோதரர் மற்றும் பிற உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்ற மஹ்சா என்ற இளம்பெண் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலிலேயே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் ஈரானிய பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அது பெரிய போராட்டமாக மாறி இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஈரானியப் பெண்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். தங்கள் தலையை மொட்டை அடித்தும், முடியை குறைவாக வெட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதராவ நடிகை பிரியங்கா சோப்ராவும் களம் இறங்கி இருக்கிறார். போராட்டத்துக்கான லோகோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:
ஈரான் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் எழுந்து நின்று குரல் எழுப்புகிறார்கள், பகிரங்கமாக தலைமுடியை வெட்டுகிறார்கள் மற்றும் பல வகையான போராட்டங்களை ஈரானிய காவல்துறையால் மிகவும் கொடூரமாக பறித்த மஹ்சா அமினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. உங்கள் தைரியம் மற்றும் உங்கள் நோக்கத்திற்காக நான் பிரமிக்கிறேன். ஆணாதிக்கத்திற்கு சவால் விடுவது மற்றும் உங்கள் உரிமைகளுக்காக போராடுவது உங்கள் உயிரைப் பணயம் வைப்பது எளிதானது அல்ல. ஆனால், நீங்கள் தைரியமான பெண்கள் இதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் செய்கிறீர்கள். இந்தக் குரல்கள் இனி அமைதியாக இருக்கக் கூடாது. நான் உங்களுடன் நிற்கிறேன்.
இவ்வாறு பிரியங்கா எழுதியிருக்கிறார்.