துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு 'நெப்போட்டிசம்' சர்ச்சை அங்கு இன்னமும் இருந்து வருகிறது. வாரிசு நடிகர்களின் புதுப் புதுப் படங்கள் வரும் போது, அவர்களுக்கு ஆதரவு தருபவர்களின் படங்கள் வரும் போது குறிப்பிட்ட நபர்களையோ, படங்களையோ 'பாய்காட்' செய்ய வேண்டும் என டிரெண்டிங்கை ரசிகர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அதனால் பல முன்னணி நடிகர்களின் ஹிந்திப் படங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்தில் பாலிவுட்டில் வெளிவந்த பல முக்கிய படங்கள் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் ஆமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படமும், சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படமும் 'பாய்காட்' டிரெண்டிங்கில் வசமாக சிக்கி தோல்வியைத் தழுவியுள்ளன. விஜய் தேவரகொண்டா வாரிசு நடிகராக இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான். இருந்தாலும் அந்தப் படத்தை கரண் ஜோஹர் இணைந்து தயாரித்ததே 'பாய்காட்'டிற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அடுத்து 'பாய்காட்' டிரெண்டிங்கில் 'பிரம்மாஸ்திரா' படம் சிக்கியுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட், மவுனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 'பாய்காட் பிரம்மாஸ்திரா' என்ற டிரெண்டிங் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வலையில் இந்தப் படமும் சிக்குமா, தப்பிக்குமா என்பது பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் கேள்வியாக உள்ளது.