300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். கங்கனா ரணவத் போன்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுகிறவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று தெரிவித்திருந்தார் . இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல போதை வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவரும் இவர்தான். ஆர்யன்கான் நிரபராதி அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் திடீரென மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.