கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை கவனித்து பார்த்தால் ஓவொரு படத்திலும் அவர் எந்த அளவுக்கு இந்திய சினிமாவை உலக அளவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என்பது நன்றாகவே தெரியும்.. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் கூட அவரது முந்தைய படங்களுக்கு சளைத்தது இல்லை என்றும் சொல்லும் விதமாக பிரமாண்டம் காட்டி இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களும் கூட ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ராஜமவுலியின் திறமையை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இன்னும் ஒருபடி மேலே போய், ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் என்றால் அவருக்கான இந்தியாவின் பதில் தான் ராஜமவுலி என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் படங்களை போல ஈகா, பாகுபலி-1, பாகுபலி-2, இப்போது ஆர்ஆர்ஆர் என ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் பதிலாக விளங்கும் ராஜமவுலி, ஒருநாள் அவரையும் மிஞ்சுவார்.. இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்தி பிடித்ததற்காக ராஜமவுலிக்கு வாழ்த்துக்கள்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அனில் கபூர்.