புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை கவனித்து பார்த்தால் ஓவொரு படத்திலும் அவர் எந்த அளவுக்கு இந்திய சினிமாவை உலக அளவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என்பது நன்றாகவே தெரியும்.. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் கூட அவரது முந்தைய படங்களுக்கு சளைத்தது இல்லை என்றும் சொல்லும் விதமாக பிரமாண்டம் காட்டி இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களும் கூட ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ராஜமவுலியின் திறமையை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இன்னும் ஒருபடி மேலே போய், ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் என்றால் அவருக்கான இந்தியாவின் பதில் தான் ராஜமவுலி என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் படங்களை போல ஈகா, பாகுபலி-1, பாகுபலி-2, இப்போது ஆர்ஆர்ஆர் என ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் பதிலாக விளங்கும் ராஜமவுலி, ஒருநாள் அவரையும் மிஞ்சுவார்.. இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்தி பிடித்ததற்காக ராஜமவுலிக்கு வாழ்த்துக்கள்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அனில் கபூர்.