சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
வெளிநாட்டில் இருந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் புகழ்பெற்றாலும், இதன் கண்டன்ட் உரிமம் வெளிநாட்டு நிறுவனத்திடம் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை போன்றே இந்தியாவில் லாக்கப் என்ற நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கங்கனா ரணவத் தொகுத்து வழங்குகிறார்.
இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மொத்தம் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் சுதந்திரமாக சொகுசாக இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிறையில் இருப்பது போன்று எந்த வசதியும் இல்லாமல் இருப்பார்கள்.
சர்ச்சை நாயகியான கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் இந்நிகழ்ச்சி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு ஐதராபாத்தை சேர்ந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. லாக்கப் டைட்டிலும், அதன் கண்டன்டும் எங்களுடையது. அதனை நாங்கள் காப்புரிமை பதிவு செய்துள்ளோம். எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.