கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. ஜனவரியில் வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திரபிரசாத்தே கதை எழுதி வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆர்ஆர்ஆர் படம் வெளியானதும் சிறிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூரை வைத்து ஒரு ஹிந்தி படத்தை ராஜமவுலி இயக்கப்போவதாகவும், அந்த படத்தை சில மாதங்களிலேயே இயக்கி முடித்த பிறகு மகேஷ்பாபு படவேலைகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராஜமவுலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.