ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
இந்தியாவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்த பெரிய திரைப்பட விழா கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவாகும். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்கட்டாவில் நாளை (ஜன 7) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும்போது, சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் கோவிட் மேலும் அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
மேலும் திரைப்பட விழாக் குழுவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிமக்களின் பாதுகாப்பை கவனமாக பரிசீலித்த மாநில அரசு, ஜனவரி 7 முதல் நடைபெறவிருந்த 27வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. விழாவின் அடுத்த தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.