துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சென்னையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்ட விரும்பிகள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதை தொடர்ந்து புதுச்சேரியில் பல இடங்களில் தனியார் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று 3 நாள் இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வந்தது.
சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் உள்ள பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீச்சாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.