பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சமூக பிரச்சனைகளுக்கு தொலைக்காட்சி தொடர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி தொடர் 100 நாட்களை கடந்து விட்டது.
இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான தீபிகா கூறுகையில் , தங்கமயில் எனது லட்சிய கதாபாத்திரம், மனதிற்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம். தைரியமும் துணிச்சலும் கலந்த பெண், ஆனால் குடும்பம் என்று வரும்போது மிகவும் மென்மையானவளாக தங்கமயில் மாறிவிடுவாள். இவ்வாறு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க பெருமைப்படுகிறேன். நேயர்களுக்கு மத்தியில் மிகவும் பிராபலமாக இத்தொடர் விளங்குகிறது. இத்தொடர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து ரசிகர்கள் தரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மேலும் கடுமையாக உழைப்பேன் என்று பெருமிதம் கொள்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் இத்தொடரின் கதாநாயகன் ஷிவ் சதிஷ். நடிக்க கற்றுக்கொண்டதை போல படப்பிடிப்பில் உள்ள நுட்பங்களையும் தெரிந்துக் கொண்டேன். இத்தொடரில் பணியாற்றும் அனைவரும் ஒரு நட்புடனே பழகி வருகிறோம். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் உற்சாகமாக பணியாற்றுவோம். மேலும் பல திருப்பங்களுடன் இத்தொடர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்த வெற்றிக்கு இதுவரை ரசிகர்கள் அளித்த ஆதரவே காரணம், என ஷிவ் சதிஷ் கூறுகிறார்.