நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய அவர் மீண்டும் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அண்மையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து சீக்கிரமே சீரியல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.