நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
முன்னணி சேனலான ஜீ தமிழ் தற்போது புதிய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறது. முன்பு ஏராளமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பியது. பின்னர் நேரடி சீரியல்களுக்கு மாறியது. என்றாலும் டப்பிங் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் மீண்டும் டப்பிங் சீரியல்களை களம் இறக்கி உள்ளது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் 'நானே வருவேன்', 'லட்சுமி கல்யாணம்' என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு 'நானே வருவேன்' சீரியலும், 'லட்சுமி கல்யாணம்' தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 'லட்சுமி கல்யாணம்' தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், 'நானே வருவேன்' தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.