மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
முன்னணி சேனலான ஜீ தமிழ் தற்போது புதிய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறது. முன்பு ஏராளமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பியது. பின்னர் நேரடி சீரியல்களுக்கு மாறியது. என்றாலும் டப்பிங் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் மீண்டும் டப்பிங் சீரியல்களை களம் இறக்கி உள்ளது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் 'நானே வருவேன்', 'லட்சுமி கல்யாணம்' என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு 'நானே வருவேன்' சீரியலும், 'லட்சுமி கல்யாணம்' தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 'லட்சுமி கல்யாணம்' தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், 'நானே வருவேன்' தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.