நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல சின்னத்திரை நடிகரான கார்த்தி தற்போது வானத்தைப் போல என்ற தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் துளசியை உருகி உருகி காதலிக்கும் கார்த்தி தனது நிஜ வாழ்விலும் காயத்ரி என்ற பெண்ணை அதையும் விட உருக்கமாக காதலித்து வருகிறார். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் நிகழ்ச்சி மேடையில் வைத்து கார்த்தி தனது காதலி காயத்ரிக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போதே இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கார்த்தி - காயத்ரியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.