காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிரபல சின்னத்திரை நடிகரான கார்த்தி தற்போது வானத்தைப் போல என்ற தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் துளசியை உருகி உருகி காதலிக்கும் கார்த்தி தனது நிஜ வாழ்விலும் காயத்ரி என்ற பெண்ணை அதையும் விட உருக்கமாக காதலித்து வருகிறார். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் நிகழ்ச்சி மேடையில் வைத்து கார்த்தி தனது காதலி காயத்ரிக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போதே இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கார்த்தி - காயத்ரியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.