எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபல நட்சத்திர ஜோடியான சமந்தா - நாகசைதன்யா இருவரின் காதல் திருமணம் நான்கு வருடங்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியான செய்தி தான். அதைவிட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா பிரபல நடிகர். அவர்களது குடும்பமே பாரம்பரிய சினிமா குடும்பம். ஆனாலும் நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று என்றும் அது குறித்து கேள்விப்பட்டதும் தனது மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்ததாகவும் ஆனால் தனது மகள் சமந்தா தனது தரப்பு விளக்கங்களை கூறி தன்னை கன்வின்ஸ் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் சமந்தாவின் தந்தை.