அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் |
'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். 'ராதேஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பிரபாஸ் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. 'ஆதி புருஷ்' படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஹிந்தி வசூல் நடிகர்களான சல்மான்கான், அக்ஷ்ய் குமார் கூட அவ்வளவு சம்பளத்தை இதுவரை வாங்கியதில்லை. தென்னிந்திய அளவில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிறார்கள். ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி என ஒரு தகவலைக் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில பரப்பினார்கள்.
150 கோடியே இல்லை என்றாலும் 100 கோடியாக இருந்தால் கூட தற்போது நடிக்கும் படங்கள் மூலம் 500 கோடி வரையாவது சம்பாதித்துவிடுவார் பிரபாஸ்.