மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாயல் கோஸ். தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு இங்கு வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்று அங்கு கவர்ச்சி நடிகையாக வளர்ந்தார். பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் சிலர் தன்னை தாக்க வந்ததாகவும், முகத்தில் ஆசிட் வீச முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
சில மர்ம நபர்கள் சிலர் என்னைப் பின் தொடர்ந்து வந்ததார்கள் அவர்கள் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க முயற்சித்ததுடன், என் மீது ஆசிட் வீச முயற்சித்தனர். நான் அதிஷ்டவசமாக காருக்குள் ஏறி தப்பினேன், ஆனாலும் எனது இடது கையில் அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள். நான் கூச்சல் எழுப்பியது யாருக்கும் கேட்கவில்லை.
அந்த கும்பலிடம் இருந்து நான் தப்பியது மிகப்பெரும் அதிர்ஷ்டம். என்னுடைய வாழ்வில் இதுநாள் வரையில் இதுபோன்ற ஒரு தாக்குதலை தான் சந்தித்தது இல்லை, இனி இதுபோன்ற ஒரு சம்பவத்தை சந்திக்கவே கூடாது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன் எதற்காக அவர்கள் என்னை தாக்க வந்தார்கள், இது யாருடைய திட்டம் என்று தனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட மத்திய அமைச்சார் ராம்தாஸ் அத்வாலே பாயல் கோஸ் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்று உறுதியும் அளித்திருக்கிறார்.