மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம்.
இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் படத்திற்கு பிறகு சினேகா நடிக்கும் படம். வெங்கட் பிரபு கடைசியாக கசடதபற படத்தில் நடித்திருந்தார்.
சினேகா நடிப்பது பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: ஆரம்பத்தில், நான் சினேகாவிடம் பேசியபோது, அவர் தயங்கினார், அவர் இதற்கு முன்பு அத்தகைய கேரக்டரை செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கதையை விவரித்தவுடன், அவர் சிரித்துக் கொண்டே, நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகாவிடம் நல்ல நட்பில் இருக்கிறேன். அதானல் தான், நான் சினேகாவுடன் மீண்டும் பணியாற்ற முடிந்தது. இந்த படத்தில் சினேகா ஒரு வித்தியாசமான அம்மாவாக நடிக்கிறார். என்றார்.