வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்வரிசை ஹீரோக்களுடனும் காமெடியனாக நடித்து விட்டவர் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதனால் அடுத்து சந்தானம் பாணியில் சூரியும் முழுநேர ஹீரோவாகி விடுவாரோ என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் அனைவருமே சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அவரோ தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார். அதையடுத்து அண்ணனும், தம்பியும் ஒரேநாளில் பிறந்தார்களா? என்ற ஆச்சர்ய கேள்விகள் எழுந்தபோது, நானும் எனது தம்பி லட்சுமணனும் இரட்டை பிறவிகள் என்பதை சோசியல் மீடியாவில் தெரிவித்தார் சூரி.
அதையடுத்து டுவிட்டரில், சூரியை வாழ்த்திய சிவகார்த்திகேயன், அண்ணன் ஹீரோவாகி விட்டார். இனிமேல் நம்ம சங்கத்துக்கு வேற ஆளதான் பார்க்கனும் போல என்று கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூரி, அப்படியெல்லாம் விட்ற முடியாதுங்க தலைவரே, சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும். சங்கம்னா செயலாளர் இருக்கனும். ரொம்ப நன்றிங்க தம்பி, லவ் யூ தம்பி என்று சிவகார்த்திகேயனுக்கு பதில் கொடுத்துள்ளார் சூரி.