பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
காமெடி நடிகர் ரோபோ சங்கர் காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என பல பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
கொரோனா முதல் அலையின்போது அரசு அலுவலர்களின் மன உளைச்சலை போக்க அரசு அலுவலகங்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கும் சென்று அவர்கள் முன்னால் காமெடியாக பேசி மகிழ்ச்சிபடுத்தி வந்தார். தற்போது இரண்டாவது அலையிலும் அந்த பணியை சுதந்திர தினத்தன்று தொடங்கி இருந்கிறார். இந்த முறை சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்கள், சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த பணியை முன்னெடுத்து செல்ல இருக்கிறார்.
முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.