தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
காமெடி நடிகர் ரோபோ சங்கர் காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என பல பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
கொரோனா முதல் அலையின்போது அரசு அலுவலர்களின் மன உளைச்சலை போக்க அரசு அலுவலகங்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கும் சென்று அவர்கள் முன்னால் காமெடியாக பேசி மகிழ்ச்சிபடுத்தி வந்தார். தற்போது இரண்டாவது அலையிலும் அந்த பணியை சுதந்திர தினத்தன்று தொடங்கி இருந்கிறார். இந்த முறை சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்கள், சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த பணியை முன்னெடுத்து செல்ல இருக்கிறார்.
முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.