மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான படங்களை இயக்கி வந்த பாண்டிராஜ் முதன் முறையாக தனது பாணியில் இருந்து விலகி இதனை முழுநீள ஆக்சன் படமாக இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் சென்னையை தொடர்ந்து, காரைக்குடியில் நடைபெற உள்ளது. குறிப்பாக சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளையே லோகேஷ் கனகராஜும் தேர்வு செய்து வைத்திருக்கிறாராம்.
ஆனால் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு தற்போதைய சூழலில் அனுமதி தர முடியாது என விக்ரம் படக்குழுவினருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனராம். சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இன்னும் பத்து நாட்கள் நடைபெற இருப்பதால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு தாமதமாகிறது என சொல்லப்படுகிறது.