புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.