அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை போயப்பட்டி சீனு இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோவில் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் சிவா மேற்பார்வையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியாமகவே வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.. காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தனக்கு தெரியாது என பாலகிருஷ்ணா கூறியிருந்தார். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்து விட்டால், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து கலாட்டா பண்ணுவார்கள் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.