இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என மக்களை அதிகமாகவே வாட்டி வதைத்தது. இதனால் தங்கள் உடல் நலன் மீது மக்களுக்கு அதிக அக்கறை வந்தது. வாக்கிங் போகாதவர்கள் கூட வாக்கிங் போக ஆரம்பித்தார்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வும் ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. அதன் காரணமாக பழையபடி மக்களும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். சைக்கிளிங் செல்வதற்காக தனியாக நேரத்தை ஒதுக்காமல் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு பதிலாக சைக்கிளில் சென்று வந்தால் அது உடற்பயிற்சியாகவும் மாறிவிடும்.
கடந்த வாரம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சைக்கிளிங் பற்றி பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் சினிமாவின் சீனியர் நாயகிகளில் ஒருவரான திரிஷாவும் தன்னுடைய சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்.
"இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவை பார்த்து இனி பலரும் சைக்கிளிங் செல்ல ஆரம்பிப்பார்கள்.