சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
திபேமிலிமேன்-2 தொடரில் தமிழ்ப்போராளி ராஜி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா. இந்த தொடரின் டிரைலர் வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று இந்த தொடர் வெளியானது. இந்த தொடரில் தான் நடித்ததற்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் சமந்தா. அவர் கூறுகையில், தி பேமிலிமேன்-2 தொடரில் நடித்ததற்காக எனக்கு ஏராளமான பாராட்டுக்கள் வருகின்றன. எனது நடிப்பு குறித்து வெளியாகியுள்ள மதிப்புரைகளும் கருத்துக்களும் எனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. ராஜி எப்போதும் சிறப்பானவளாக இருப்பாள் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.
மேலும், இந்த தொடரில் நடிக்க என்னை அணுகியபோது அந்த கேரக்டரை சித்தரிக்க அதை உணரக்கூடிய திறன் வேண்டும் என உணர்ந்தேன். அதோடு, ஈழப்போரில் பெண்களின கதைகளை உள்ளடக்கிய ஆவண படங்களை எனக்கு கொடுத்தார்கள். அந்த ஆவண படங்களை நான் பார்த்தபோது ஈழத்தமிழர்கள் நீண்டகாலத்திற்கு மேற்பட்ட கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத துயரங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
இந்த ஆவண படங்கள் சில ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தன என்பதை நான் கவனித்தேன். அதுதான் ஈழத்தின் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தபோதும் உலகம் எப்படி விலகிப்பார்த்தது என்பது எனக்குத் தெரிய வந்தது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். இந்த உள்நாட்டு சண்டை காரணமாக எண்ணற்ற மக்கள் தொலைதூர நாடுகளில் தங்கள் மனதிலும், இதயத்திலும், காயங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஜியின் கதை கற்பனையாது என்றாலும், போரினால் இறந்தவர்களுக்கும், போரின் வேதனையான நினைவுகளுடன் வாழ்பவர்களுக்கும் சமர்ப்பணம். ராஜியின் சித்தரிப்பு சமநிலையானது. நுணுக்கமானது மற்றும் உணர்திறன் கொண்டது. முன்பை விட எங்களுக்கு வெறுக்கத்தக்க அடக்குமுறைக்கு பேராசைக்கு எதிராக மனிதர்களாக ஒன்றிணைவதற்கு ஒரு தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக இருக்க விரும்புகிறேன். நாம் அவ்வாறு செய்யத் தவறினால் எண்ணற்றவர்களின அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும்''.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.