'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நமது சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது.
விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு 25 நாட்கள் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பாகவே குழுவினர் சென்னை திரும்பினர். வந்தபின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இந்த வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பிரம்மாண்ட ஷாப்பில் மால் அரங்கமும் தயாராகி வந்ததாம். ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என விஜய் தெரிவித்தாராம். மேலும், அரங்கம் அமைக்கும் பணியாளர்களின் நலனைக் கருதியும் அந்த வேலையையும் நிறுத்தச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கொரோனா தாக்கம் குறைந்து எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடிவெடுக்கிறோமோ அதற்கு முன்பு மீண்டும் அந்தப் பணிகளைத் துவக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.