இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நமது சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது.
விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு 25 நாட்கள் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பாகவே குழுவினர் சென்னை திரும்பினர். வந்தபின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இந்த வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பிரம்மாண்ட ஷாப்பில் மால் அரங்கமும் தயாராகி வந்ததாம். ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என விஜய் தெரிவித்தாராம். மேலும், அரங்கம் அமைக்கும் பணியாளர்களின் நலனைக் கருதியும் அந்த வேலையையும் நிறுத்தச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கொரோனா தாக்கம் குறைந்து எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடிவெடுக்கிறோமோ அதற்கு முன்பு மீண்டும் அந்தப் பணிகளைத் துவக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.