எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நமது சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது.
விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு 25 நாட்கள் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பாகவே குழுவினர் சென்னை திரும்பினர். வந்தபின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இந்த வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பிரம்மாண்ட ஷாப்பில் மால் அரங்கமும் தயாராகி வந்ததாம். ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என விஜய் தெரிவித்தாராம். மேலும், அரங்கம் அமைக்கும் பணியாளர்களின் நலனைக் கருதியும் அந்த வேலையையும் நிறுத்தச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கொரோனா தாக்கம் குறைந்து எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடிவெடுக்கிறோமோ அதற்கு முன்பு மீண்டும் அந்தப் பணிகளைத் துவக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.