முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் | கமலிடம் நஷ்ட ஈடு கேட்கும் 'தக்லைப்' படத்தின் கர்நாடக விநியோகஸ்தர்! | 50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! |
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளின்படி பலரும் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது தடுப்பூசி போடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் நடிகை நதியா, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் தற்போது போட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மும்பை நகராட்சி மருத்துவமனையில் ராஜ மரியாதையுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். மருத்துவ சுகாதார பணியாளர்களும், களப்பணியாளர்களும் ஓய்வில்லாமல், சுயநலமில்லாமல் இந்த தேசத்துக்காக பணியாற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மும்பை மாநகராட்சிக்கு ஹேட்ஸ் ஆப். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் நதியா.
![]() |