பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அடங்கமறு, அயோக்யா படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷி கண்ணா தற்போது தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக 'தேங்க்யூ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. விக்ரம் குமார் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் பலரும் தங்களது படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி வருகின்றனர்.. ஆனால் ராஷி கண்ணாவோ, “இங்கே கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை.. மக்கள் வழக்கம்போல சர்வ சாதாரணமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.. நாங்கள் சிறிய அளவிலான படக்குழு என்றாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்தமுறை கொரோனா முதல் அலையில் சீனாவுக்கு அடுத்ததாக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், தற்போது அந்த அளவுக்கு கொரோனா தாக்கம் இல்லை என ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.