ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அடங்கமறு, அயோக்யா படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷி கண்ணா தற்போது தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக 'தேங்க்யூ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. விக்ரம் குமார் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் பலரும் தங்களது படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி வருகின்றனர்.. ஆனால் ராஷி கண்ணாவோ, “இங்கே கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை.. மக்கள் வழக்கம்போல சர்வ சாதாரணமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.. நாங்கள் சிறிய அளவிலான படக்குழு என்றாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்தமுறை கொரோனா முதல் அலையில் சீனாவுக்கு அடுத்ததாக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், தற்போது அந்த அளவுக்கு கொரோனா தாக்கம் இல்லை என ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.