ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா |

இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படம் 'சர்தார்'. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று(ஏப்., 25) பிற்பகல் 12.30க்கு வெளியிட திட்டமிட்டு, டுவிட்டர் தளத்தில் சில 'கோடுகளை' பதிவிட்டு, “மக்களே இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, இல்லையென்றால் இன்று 12.30 மணிக்கு கார்த்தி இதற்கு பதில் சொல்வார்,” என இயக்குனர் மித்ரன் டுவீட் செய்திருந்தார்.
டுவிட்டரில் இப்படி பதிவிட்டுவிட்டு ஊர் முழுவதும் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' என இப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊருக்கே தெரியும்படி போஸ்டரையும் ஒட்டிவிட்டு, 12.30 மணிக்கு கார்த்தியின் டுவிட்டரையும் பாருங்கள் என இயக்குனர் கேட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளார்கள்.
போட்ட பிளானை ஒழுங்கா போட வேணாமா, ஒரு படத்தில் வடிவேலு திருடப் போவதும், அதற்கு முன்பே அவரது ஆட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சர்தார்' படத்திலாவது சஸ்பென்ஸை கரெக்டா வையுங்கப்பா...