பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படம் 'சர்தார்'. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று(ஏப்., 25) பிற்பகல் 12.30க்கு வெளியிட திட்டமிட்டு, டுவிட்டர் தளத்தில் சில 'கோடுகளை' பதிவிட்டு, “மக்களே இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, இல்லையென்றால் இன்று 12.30 மணிக்கு கார்த்தி இதற்கு பதில் சொல்வார்,” என இயக்குனர் மித்ரன் டுவீட் செய்திருந்தார்.
டுவிட்டரில் இப்படி பதிவிட்டுவிட்டு ஊர் முழுவதும் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' என இப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊருக்கே தெரியும்படி போஸ்டரையும் ஒட்டிவிட்டு, 12.30 மணிக்கு கார்த்தியின் டுவிட்டரையும் பாருங்கள் என இயக்குனர் கேட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளார்கள்.
போட்ட பிளானை ஒழுங்கா போட வேணாமா, ஒரு படத்தில் வடிவேலு திருடப் போவதும், அதற்கு முன்பே அவரது ஆட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சர்தார்' படத்திலாவது சஸ்பென்ஸை கரெக்டா வையுங்கப்பா...