பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி, கடந்த வருடம் கொரோனா தொற்று பரவிய போதே திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தெலுங்குத் திரையுலகத்தினரை இணைத்து செயலாற்றினார்.
கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவிகளைச் செய்ய முன்னெடுத்தார். அதன் மூலம் திரையுலகத்தினரைச் சேர்ந்த பலருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திரையுலகத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கொரானோ தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முயற்சிக்கு தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரோனா பரவல் நேரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 45 வயதிற்கு மேற்பட்ட திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவச தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளார். இந்த சமூகத்திற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.