நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே சில இடையூறுகள் ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் அரசியல் பணிகளில் இறங்கி விட்டதால், தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து புதிய படவேலகளை தொடங்கினார் ஷங்கர்.
தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படவேலைகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் ஷங்கர் படத்திலும் அவர்கள் இணைகிறார்கள்.
மேலும், இந்தியன்- படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படவேலைகளில் ஷங்கர் இறங்க வேண்டும் என்று அவருக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளது லைகா நிறுவனம். நீதிமன்றமோ ஷங்கரிடத்தில் விளக்கம் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விட்டது. ஆனால் இப்படி லைகா நிறுவனம் தடை கோரிவழக்குத் தொடர்ந்தபோது, அதுபற்றி கவலைப்படாமல் ராம்சரண் படவேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.