கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி, இதன்பிறகு இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், 2015ல் கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லியிருப்பதாகவும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி கார்த்தி கொம்பன்-2வில் நடித்தால் அவர் நடிக்கும் முதல் இரண்டாம் பாக படம் இதுவாகத்தான் இருக்கும்.