இலங்கை அகதிகள் பின்னணியில் உருவான மற்றொரு படம் | லாஜிக்கை விட, ரசிகர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்: என்.டி.பாலகிருஷ்ணா | படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் | குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி |
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாவகரத்து செய்து விட்டார். தற்போது பிரபல சர்வதேச பேட்மிட்டன் வீராங்கணை ஜூவாலா கட்டாவை தீவிரமாக காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அதோடு ஜூவாலா கட்டாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை. ஜூவாலா கட்டாவுடன் இருப்பது காதல் அல்ல, பரஸ்பர மரியாதைதான். எனது நலனின் அவரும், அவர் நலனில் நானும் அக்கறையுடன் இருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பேன். அவர் விளையாடுவார். அவரது பேட்மிட்டன் அகாடமியை தொடர்ந்து நடத்துவார்.
ஜூவாலா கட்டா தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் சந்தித்த சவால்கள், அவமானங்கள், விமர்சனங்கள் அனைத்தையும் சொன்னார். அதில் ஒரு சினிமாவுக்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நான் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். இதற்கு நிறைய பணம் வேண்டும் உங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அந்த பணத்தை நான் சம்பாதித்து விட்டு தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இப்போது எனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க இருக்கிறேன். என்றார்.