துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாவகரத்து செய்து விட்டார். தற்போது பிரபல சர்வதேச பேட்மிட்டன் வீராங்கணை ஜூவாலா கட்டாவை தீவிரமாக காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அதோடு ஜூவாலா கட்டாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை. ஜூவாலா கட்டாவுடன் இருப்பது காதல் அல்ல, பரஸ்பர மரியாதைதான். எனது நலனின் அவரும், அவர் நலனில் நானும் அக்கறையுடன் இருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பேன். அவர் விளையாடுவார். அவரது பேட்மிட்டன் அகாடமியை தொடர்ந்து நடத்துவார்.
ஜூவாலா கட்டா தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் சந்தித்த சவால்கள், அவமானங்கள், விமர்சனங்கள் அனைத்தையும் சொன்னார். அதில் ஒரு சினிமாவுக்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நான் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். இதற்கு நிறைய பணம் வேண்டும் உங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அந்த பணத்தை நான் சம்பாதித்து விட்டு தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இப்போது எனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க இருக்கிறேன். என்றார்.