அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அவரது 46வது படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் படப்பிடிப்பு நடந்தபோது அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் படிப்பிடிப்பு நடத்திய சினிமா குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றார். அவரை அங்கிருந்த படப்பிடிப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டல் விடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் பேசி உள்ளனர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அவர்களை நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் காவலம் நிலையம் அழைத்து விசாரித்தனர்.