திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கடந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா தாக்கத்தால் இந்தப்படத்தின் ஓட்டம் தடைபட்டாலும் மறு ரிலீஸ் செய்தபோதும், ஓடிடியில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், இன்னொரு கதாநாயகியாகவும் பங்குபெற்ற நிரஞ்சனா அகத்தியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் தேசிங் பெரியசாமி. இந்தநிலையில் இந்தப்படம் வெற்றி பெற்றதற்காகவும், மணமக்களுக்கு திருமண பரிசாகவும் புதிய போர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்.