படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷாமிலி சுகுமார். இவரது பெயரில் மர்மநபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதில், ஷாமிலி பற்றி அவதூறான கருத்துக்களும், இளைஞர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இது பற்றி ஷாமிலியின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .