தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

பொங்கல் நெருங்குவதை தொடர்ந்து அது தொடர்பான ஜல்லிக்கட்டு விழாக்களும் தொடங்கி உள்ளது. சமீபகாலமாக ஜல்லிக்கட்டை படத்தில் ஒரு பகுதியாக கொண்ட படங்கள் ஏராளமான வந்துள்ளது. விருமாண்டி, மெர்சல், கருப்பன், அன்பறிவ், பேட்டைகாளி போன்றவை அவற்றில் முக்கியமான படங்கள்.
ஆனால் முதல் ஜல்லிக்கட்டு சினிமா எது தெரியுமா? அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'தாய்க்கு பின் தாரம்'. ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த சதியின் காரணமாக எம்ஜிஆரின் தந்தை இறந்து விட தந்தை இழந்த வெற்றியை மகன் பெறுவதுதான் படத்தின் கதை. 1956ம் ஆண்டு வெளிவந்தது.
எம்.ஏ. திருமுகம் இயக்கிய இந்த படத்தில் பானுமதி டி.எஸ். பாலையா, ராதாகிருஷ்ணன், கண்ணாம்பா, சகுந்தலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை அமைத்து இருந்தார் கே.வி. மஹாதேவன். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம். படம் பெரிய வெற்றி பெற்றதால் படத்தில் எம்ஜிஆருடன் நடித்த ஜல்லிக்கட்டு காளையை தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவாக வைத்துக்கொண்டார் தேவர்.
இப்படத்தில் முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். அவரின் தாயாக கண்ணாம்பா நடித்தார். மேலும் பாலையா, பானுமதி உள்ளிட்டோர் நடித்தனர். படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிகளும், சிலம்ப காட்சிகளும் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது .
மாயாண்டி எனும் அடியாள் கதாபாத்திரத்தில் தேவரும் நடித்திருந்தார். தேவரும் எம்.ஜி.ஆரும் சிலம்ப சண்டை போடும் காட்சிகளை மிகவும் ரசித்தார்கள் ரசிகர்கள். அதே போல எம்.ஜி.ஆர் காளையை அடக்கும் காட்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.