பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை |

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாக இருந்தார் ஜி.வி.பிரகாஷ். குறைந்த சம்பளம், பந்தா இல்லாத தன்மை உள்ளிட்ட சில காரணங்களால் அவரை வரிசையாக புக் செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியும் அடைந்தன. அவரே தயாரித்து, ஹீரோவாக நடித்த கிங்ஸ்டன் படமும், அடுத்து வந்த பிளாக்மெயிலும் தோல்வி அடைய, படத்தில் நடிப்பத குறைத்துவிட்டு, அவர் இசையில் கவனம் செலுத்தணும். கதையில் கவனம் செலுத்தணும். அதிக படங்களில் நடிப்பதை தவிர்க்கணும் என்று பலரும் அட்வைஸ் செய்தனர்.
இப்போது நடிப்பதை குறைத்துவிட்டாலும் அவர் கைசவம் இடி முழக்கம், மெண்டல் மனதில், இம்மார்ட்டல் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக ஹேப்பிராஜ் படத்திலும் நடித்து வருகிறார். இசையமைப்பாளராக அவர் ஜெயித்துக் கொண்டே வருகிறார். அவர் இசையமைத்த படங்கள் ஹிட்டாகி வருகின்றன. அதற்காக 2 தேசிய விருது வாங்கிவிட்டார். ஆனாலும், ஹீரோவாகவும் ஜெயிக்க வேண்டும் என்பது அவர் ஆசையாம். கைவசம் இருக்கிற படங்களில் ஒன்று இரண்டாவது அடுத்த ஆண்டு ஹிட் ஆக வேண்டும் என்று நினைக்கிறாராம்.