மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 10 வருடங்களில் அடுத்தடுத்து வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பாலிவுட்டில் கூட இந்த இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டு மூன்றாவது பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி கேரளாவில் 'திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மோகன்லாலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.




